நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பல்துறை திறமையால் பிரபலமான ராகவா லாரன்ஸ், தனது உதவி மனப்பான்மைக்காகவும் அறியப்படுகிறார். தற்போது, சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்பனை செய்து வருகிற 80 வயது முதிய தம்பதி குறித்து அறிந்து, அவர்களுக்கு நிதி உதவி செய்யத் தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,
Today, A post reached me through social media about an 80 year old man and his wife in Chennai who make sweets and polis, selling them on trains to survive. Their resilience moved me deeply. 🙏
— Raghava Lawrence (@offl_Lawrence) September 10, 2025
I am ready to contribute ₹1,00,000 to support their journey, hoping it brings them… pic.twitter.com/yRYZj677Ze
“சென்னையில் 80 வயது முதியவர் மற்றும் அவருடைய மனைவி சேர்ந்து இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்கிறார்கள் என்பதை இணையத்தில் பார்த்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.”
என்று தெரிவித்துள்ளார்.
