Malarvili

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் மலர்விழி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

hq720 3

எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்…

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியின் மனதோடு மனோ நிகழ்ச்சியில் பங்கேற்றதை, அவரின் மறைவிற்கு பின்பு மீண்டும் வலையேற்றி இருக்கிறார்கள். இதுநாள் வரை ஜானகி அம்மாவை பாடகி என்கிற கோணத்தில் மட்டுமே யோசித்திருப்பபோம் அல்லவா, இந்த நிகழ்ச்சியில் அவரிடம் வெளிப்பட்ட குழந்தைத்தனம், உச்சமான நகைச்சுவை உணர்வு, நேர்த்தியான கதை சொல்லி மற்றும் தமிழை தாய்மொழிக்கு நிகராக நேசிக்கும் குணம் சொல்லப்போனால் கண்ணதாசன் வரிகளை அவர் வியந்து அவற்றை விவரிக்கும் போது, தமிழ்ப்பற்றை […]

எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்… Read More »

Exclusive
jothika

NEET: “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடிகை ஜோதிகா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, போராட்டக் குழுவினர் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இரண்டாம் கட்ட

NEET: “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு Read More »

Tamil cinema
cinemakeda

கூலி சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பெரிய நட்சத்திரத்தின் படமும் வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்போடு வெளியாகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் உலகளவில் வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய நிலையில், அடுத்ததாக விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ அந்த சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. வசூல் என்பது கதையோ, நடிப்போ மட்டுமல்ல; வெளியீட்டு சூழல், திரையரங்குகளின் எண்ணிக்கை, முன்பதிவு, குடும்ப பார்வையாளர்களின்

கூலி சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? Read More »

Exclusive
Arulvaan

அருள்வான்; பள்ளிக்கூடத்தை அமைக்க போராடும் ஒரு சிறுமியும் அவருக்கு உறுதுணையான ஆட்சியரின் முயற்சி!

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் படிப்பறிவு சிறிதும் இல்லாத மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் கந்தன் அமரவல்லி தங்களது மகள் குறிஞ்சியுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருப்பவர்களை விரட்டி அடித்து விட்டு அவர்களது இடங்களை அபகரிக்க வன அலுவலர் முயற்சி செய்து வருகிறார். படிப்பறிவு இல்லாத அந்த மக்களின் தலைவனாக இருக்கும் மூப்பனிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி அவர்களை அந்த இடத்தை விட்டு

அருள்வான்; பள்ளிக்கூடத்தை அமைக்க போராடும் ஒரு சிறுமியும் அவருக்கு உறுதுணையான ஆட்சியரின் முயற்சி! Read More »

Exclusive
cinemakeeda 5

தமிழ் சினிமாவில் இயற்கையை உயிர்ப்பித்த 5 மறக்க முடியாத திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் காடு என்பது வெறும் படப்பிடிப்பு இடம் மட்டுமல்ல. சில திரைப்படங்களில் அது கதையின் உணர்வுகளைச் சுமக்கும் கதாபாத்திரமாகவும், மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாகவும், இயற்கையின் மர்மங்களைப் பேசும் அமைதியான மொழியாகவும் மாறியுள்ளது. காதலுக்கு சாட்சியாகவும், தஞ்சமாகவும், நீதியை வழங்கும் இடமாகவும், மனிதர்களை மாற்றும் பள்ளிக்கூடமாகவும் காடு பல படங்களில் உயிர் பெற்றிருக்கிறது. அந்த வகையில், இயற்கையை கதையின் மையமாகக் கொண்டு உருவான ஐந்து முக்கியமான தமிழ் திரைப்படங்களைப் பார்ப்போம். 1. கும்கி (2012) பிரபு

தமிழ் சினிமாவில் இயற்கையை உயிர்ப்பித்த 5 மறக்க முடியாத திரைப்படங்கள்! Read More »

Exclusive
cinemakeeda 2 2

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத 6 முக்கோண காதல் திரைப்படங்கள்!

காதல் என்பது தமிழ் சினிமாவின் எப்போதும் வற்றாத கதைக்களம். ஆனால் அதில் காதல் முக்கோணம் (Love Triangle) இணையும் போது, காதல், நட்பு, பொறாமை, தியாகம், பழிவாங்குதல், குழப்பம் போன்ற உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்த வலுவான திரைக்கதைகள் உருவாகின்றன. ஒருவரை இருவர் காதலிப்பது, அல்லது ஒருவரின் மனம் இருவருக்கிடையில் சிக்கிக் கொள்வது போன்ற சூழல்கள், பல காலமாக தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த முக்கிய அம்சமாக இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட காதல் முக்கோணத்தை மையமாகக் கொண்டு உருவான

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத 6 முக்கோண காதல் திரைப்படங்கள்! Read More »

Exclusive
cinemakeeda 4

இசைஞானியும் கலைஞரும்: கருணாநிதி எழுத்தில், இளையராஜா இசையில் உருவான 5 மறக்க முடியாத திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவும் தமிழர் பண்பாட்டும் பேசப்படும் இடமெல்லாம் தவிர்க்க முடியாத இரண்டு ஆளுமைகள் முத்தமிழறிஞர் டாக்டர் மு. கருணாநிதி மற்றும் இசைஞானி இளையராஜா. ஒருவர் தனது எழுத்தாலும் வசனங்களாலும் தமிழ் சினிமாவை செழுமைப்படுத்தியவர்; மற்றொருவர் தனது இசையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை வென்றவர். இருவரும் ஒரே நாளான ஜூன் 2 அன்று பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி கதை, திரைக்கதை அல்லது வசனம் எழுதியும், இளையராஜா இசையமைத்தும் வெளியான ஐந்து முக்கியமான திரைப்படங்களைப் பார்ப்போம்.

இசைஞானியும் கலைஞரும்: கருணாநிதி எழுத்தில், இளையராஜா இசையில் உருவான 5 மறக்க முடியாத திரைப்படங்கள்! Read More »

Exclusive
Jana nayagan

‘ஜன நாயகன்’ விமர்சனம்: ஜனநாயகமா… ஜனமும் ‘கன்’னும் சம அளவில்!

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கதாநாயகனாக நடிக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தை ஹெச். வினோத் எழுதி இயக்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் காலத்தில் உருவான இந்த திரைப்படம், தேர்தல் முடிந்து த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வெளியாகியிருப்பது இதன் அரசியல் வாசிப்பையே

‘ஜன நாயகன்’ விமர்சனம்: ஜனநாயகமா… ஜனமும் ‘கன்’னும் சம அளவில்! Read More »

Cinema Reviews
the handmaiden

தி ஹேண்ட்மெய்டன் : பெண்களின் அறிவையும் ஆசையையும் கொண்டாடும் உலகத் தரச் சினிமா!

பெண்களின் அறிவாற்றல், மனோதிடம், தந்திரம் ஆகியவற்றை மையப்படுத்திய கதைகளை சினிமா இன்னும் அரிதாகவே கொண்டாடுகிறது. பெண்களின் வலிமையை வசனங்களிலும் பாடல்களிலும் மட்டுமே புகழ்ந்து பேசும் பல படங்களின் மத்தியில், அதை எந்தவித பிரசாரமும் இல்லாமல் தனது காட்சிமொழியால் நிரூபித்துக் காட்டுகிறது தி ஹேண்ட்மெய்டன் (The Handmaiden). இயக்குநர் பார்க் ச்சான் வூக் (Park Chan-wook) உருவாக்கிய இந்த திரைப்படம், பெண்களின் சாகசங்களுக்கும் அறிவுக்கும் பாலின வேறுபாடு கிடையாது என்பதை உலக சினிமாவின் மொழியில் பதிவு செய்கிறது. ஒரு

தி ஹேண்ட்மெய்டன் : பெண்களின் அறிவையும் ஆசையையும் கொண்டாடும் உலகத் தரச் சினிமா! Read More »

Exclusive
அன்பே டயானா

அன்பே டயானா -கடைசி அரைமணி நேரம் படம் அற்புதம்!

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் சீதா கிருஷ்ணா. தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சீதா கிருஷ்ணா தாய் சரளா,தந்தை பாஸ்கர்,தம்பி சிரஞ்சீவியுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் புகுந்த வீட்டில் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டில் இருக்கும் சகோதரி சத்தியவதியும் அவர்களுடனே இருக்கிறார். பாஸ்கர் ரெயில்வேத் துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். எந்நேரமும் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பவர். சிரஞ்சீவி அரசாங்கப் பணியில் இருப்பவர். சீதா கிருஷ்ணா உடற்பயிற்சி கோச்சாக இருந்து வருபவர். சரளா மாவு

அன்பே டயானா -கடைசி அரைமணி நேரம் படம் அற்புதம்! Read More »

Cinema Reviews
Scroll to Top