Exclusive

Stay updated with the latest Tamil cinema news, movie releases, reviews, box office updates, and exclusive behind-the-scenes stories. Explore everything about your favorite actors, directors, and upcoming films in one place

Nayakan

வெளியானபோது தோல்வி… இன்று காலத்தால் கொண்டாடப்படும் கமல் படங்கள்!

கலைஞானி கமலஹாசன் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெளியீட்டின் போது தோல்வி அடைந்து, பிற்காலத்தில் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படிப்பட்ட சில திரைப்படங்கள் நாயகன் (1987) விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், போட்டி படமாக வந்த மனிதன் வணிகரீதியாக வென்றது. பேசும் படம் (1987) விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவியது. குணா (1991) கமல் நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை வெகுவாக பாராட்டப்பட்டது. விமர்சன […]

வெளியானபோது தோல்வி… இன்று காலத்தால் கொண்டாடப்படும் கமல் படங்கள்! Read More »

Exclusive
puthiyathalaimurai 2026 07 11 3fuh588e 11w

கந்தர்வர்களை போல பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா!

இசை மரபு! பாடும்போது கண்களை அதிகம் இமைக்காது, தாடைப்பகுதிகள் அதிராது, பண்ணின் அளவுக்கு அதிகமாக வாயைத் திறவாது, பற்களை வெளிப்படுத்தாது இலக்கணச் சுத்தமாகப் பாடவேண்டும்; அவ்வாறு பாடுபவர்களே உண்மையான கந்தர்வர்கள் (பாடலில் வல்லவர்கள்) என்கிறது பஞ்ச மரபு எனும் இசை நூல். ”கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா – எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர் உள்ளாளப் பாடல் உணர்.” இவ் இசைநூல் மரபின்படி அங்க சேட்டைகளின்றிப் பாடிக் காண்போரின் உள்ளத்தைத் தன்

கந்தர்வர்களை போல பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா! Read More »

Exclusive
images 1

இசை நின்றுவிடாது… ஆனால் அந்தக் குரல் இனி புதிதாக ஒலிக்காது!

இந்திய திரையிசை உலகம் இன்று தனது மிகப் பெரிய பொக்கிஷங்களில் ஒன்றை இழந்துள்ளது. காலம் கடந்தாலும் அழியாத குரலின் சொந்தக்காரர், தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்பட்ட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைந்தார். ஆனால், அவரது உடல் மட்டுமே மண்ணோடு கலந்துள்ளது; அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றென்றும் ரசிகர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு பாடகி அல்ல… ஒரு தலைமுறையின் உணர்வு எஸ். ஜானகி ஒரு பின்னணிப் பாடகி மட்டுமல்ல. காதல், தாய்மை, பக்தி, சோகம்,

இசை நின்றுவிடாது… ஆனால் அந்தக் குரல் இனி புதிதாக ஒலிக்காது! Read More »

Exclusive
yuvarani

யுவராணி- தமிழ் சினிமா கொண்டாட தவறிய தேவதை!

1991 ல் பாலச்சந்தரின் ‘அழகன்’ படத்தில் அறிமுகம். மதுபாலாவின் தோழியாக இரண்டு காட்சிகளில் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வார். எனினும், டைட்டில் கார்டில் ‘அறிமுகம்’ யுவராணி என இவருக்கு ‘பாலச்சந்தரின் அறிமுகம்’ என்கிற அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 1992 ல் வெளியான ‘புது வருஷம்’ மற்றும் ‘தம்பிக்கு ஊருக்கு புதுசு’, 1993 ல் வெளியான ‘மின்மினிப் பூச்சிகள்’ ஆகிய படங்களிலும் யுவராணிக்கு டைட்டில் கார்டில் அறிமுகம் என்றே வந்தது. இவற்றில் ‘புது வருஷம்’ படத்தில் ‘ரத்னா’ என்றும் , ‘மின்மினிப்

யுவராணி- தமிழ் சினிமா கொண்டாட தவறிய தேவதை! Read More »

Exclusive
thevar magan

சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்!

94ம் ஆண்டு மதுரையில் ஏதோ திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது முதல் முறையாகப் பார்த்தேன். ஒன்னாப்போ, ரெண்டாப்போ படித்துக் கொண்டிருந்த சமயம். படத்துல மூணே மூணு ஃபைட் தான் என‌ கூட்டிட்டு போன சித்தப்பாவிடம் அங்கலாய்த்து கொண்ட நினைவு. பின்னர் 11ம் வகுப்பு படிக்கும் போது டிவியில் பார்த்தேன். படம் முழுதாக புரியவில்லை என்றாலும் அதன் உயிர்ப்பான, அசலுக்கு நெருக்கமானக் காட்சிகள் ஈர்த்தது. பெரும்பகுதி ப்ளாஸ்டிக்கான சினிமாக்கள் மத்தியில் ஒரு நல்ல படம் போலும் ‘தேவர்

சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்! Read More »

Exclusive
superstar rajinikanth about baasha movie magic

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

படத்தில் நடிப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், அது கமலின் வழக்கமான வெற்றிப் படங்களில் ஒன்றாகவே இருந்திருக்கும். இப்படி யோசித்துப் பாருங்கள். தேவர் மகன் படத்தில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும்? ரஜினி நன்றாகவே நடித்தாலும், படம் வெற்றி பெற்றாலும், அந்தப் படத்திற்குக் கிடைத்த சிறப்பைப் பெற்றிருக்க முடியாது. அதுபோலத்தான் பாட்ஷா படமும். பாட்ஷா படம் முழுக்கவும் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது. கமல் உள்ளிட்ட எந்த நடிகர் நடித்தாலும், அது ரஜினியின் நடிப்பைப் போல வராது. ஆயினும்,

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? Read More »

Exclusive
maxresdefault

இதயா நீ காதல் விதையா’ – இதயம் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

“இதயம் முரளி” டிரெய்லர் பார்த்த போது உடனே ‘இதயம்’ தான் இதயத்திலிருந்து வெளியே வந்துவிட்டது. இதயம் ஒரு ‘ஒரு தலைக்காதல்’ படமென்றாலும் அது தனித்து நின்றது அதன் மேக்கிங்கில் தான். கதிர் ஒரு டிசைனர் என்பதால் காட்சிகளை அழகாக செதுக்கி இருந்தார். படத்தில் முரளி கிராமத்திலிருந்து நகருக்கு டாக்டருக்கு படிக்க வரும் இளைஞன். அது அவருக்கு அழகாக செட்டானது. நாயகி ஒரு படித்த, பெரியவீட்டு நகரப்பெண். ஹீராவின் உயரமும், குதிரைக்கு வாலும், முகத்தில் முன் தொங்கும் முடி

இதயா நீ காதல் விதையா’ – இதயம் முரளி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் Read More »

Exclusive
வாலி

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்- ‘வாலிடா’

தமிழ் திரையிசையில் பாடல் வரிகளை வெறும் கவிதை வரிகளாக மட்டுமல்லாமல், படத்தின் கதாபாத்திரங்கள், நடிகர்-நடிகையர், இயக்குநர், கூடவே தனக்கே உரிய கையொப்பங்களையும் நுணுக்கமாக புகுத்தி விளையாடிய பாடலாசிரியர் என்றால், அந்தப் பட்டியலில் முதன்மையாக நினைவிற்கு வருபவர் கவிஞர் வாலி. வாலியின் பாடல்களை கவனமாகக் கேட்கும்போது, அவை வெறும் இனிமையான சொற்களின் தொடராக மட்டும் இல்லாமல், ஒரு புத்திசாலித்தனமான ‘இன்சைடு ரெஃபரன்ஸ்’ உலகம் என்பதை உணர முடியும். காட்சிக்குத் தேவையான உணர்வை குலைக்காமல், பாடலின் ஓட்டத்தையும் சிதைக்காமல், அதற்குள்

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்- ‘வாலிடா’ Read More »

Exclusive
கண்ணில் ஆடும் ரோஜா

காலம் கடந்தும் கிராமப்புறங்களில் கோலோச்சும்…’கண்ணில் ஆடும் ரோஜா’!

சரத்குமாரின் ‘கேப்டன்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்தது. அந்தப் படத்தில், ‘கன்னத்துல வை’, ‘இடுப்பு அடிக்கடி புடிக்குது’, ‘உனக்கு ஒரு மச்சம்’ , ‘கண்ணில் ஆடும் ரோஜா’ என சிற்பி கொடுத்த அத்தனை மெட்டுகளுமே ஹிட் ரகங்கள். இவற்றில் ‘கன்னுத்துல வை’ இன்றளவும் டவுன் பஸ்களில் தவிர்க்க முடியாத பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கும் மெட்டு. கேட்டதும் ஈர்க்கக்கூடிய வெகுஜன சுவார்ஸ்யக் கூறுகளை ,அந்தப் பாடல் தாராளமாகக் கொண்டிருப்பதே காலம் கடந்தும் கிராமப்புறங்களில் அந்தப் பாடல் இன்றும்

காலம் கடந்தும் கிராமப்புறங்களில் கோலோச்சும்…’கண்ணில் ஆடும் ரோஜா’! Read More »

Exclusive
hq720 2

‘பூ பூ பூ பூத்த சோலை’ கண்களை குத்தகை எடுத்துக் கொள்ளும் அழகு அது!

1991 ல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்திற்காக ராஜா கொடுத்த அனைத்து பாடல்களும் சிறப்பானவை. கிராமிய கதைக்களம் என்றால் ராஜாவிற்கு மண்வாசத்துடனான மெட்டுகள் அருவி மாதிரி கொட்டும், அதுவும் பாரதிராஜாவின் படங்களில் அது பேரருவி அவதாரம் எடுத்துவிடும். ‘பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி’, ‘சிட்டாஞ் சிட்டாங்குருவி’, ‘கருத்த மச்சான்’ , ‘ஏ மரிக்கொழுந்து’ என மண் மணக்க ஒவ்வொரு மெட்டும் தனித்து சிலாகிக்கப்பட வேண்டிய ரகம். இவை

‘பூ பூ பூ பூத்த சோலை’ கண்களை குத்தகை எடுத்துக் கொள்ளும் அழகு அது! Read More »

Exclusive
Scroll to Top