ஆசியக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் பேட்டிங் செய்த இந்தியா, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஆட்டத்தை நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் நேரில் கண்டு ரசித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
