தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, 27 ஆண்டுகள் நீண்ட மணவாழ்க்கைக்குப் பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்மணியான சங்கீதா, இலங்கை வேர்களை கொண்டவர்.
‘பூவே உனக்காக’ வெற்றி பெற்ற காலத்தில் ரசிகையாக விஜயை சந்தித்த அவர், பின்னர் வாழ்க்கைத் துணையாக மாறினார். 1999 ஆகஸ்ட் 25 அன்று இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனுவில், “திருமண நம்பிக்கையை மீறும் உறவு காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டது; 2021 முதல் ஒரே வீட்டில் இருந்தும் தனித்தனியாக வாழ்ந்தோம்” என குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகையின் பெயர் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றும், பொதுவெளியில் குடும்ப நற்பெயர் காக்கவே அது தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்.
இந்த மனு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் குடும்பநல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஊடகங்களில் விவாதம் அதிகரிக்கக்கூடும் என முன்னரே விஜய் கணித்ததால், கட்சி உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல் டிவி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று விஜய் உத்தரவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. குறிப்பாக சங்கீதா தரப்பில் குற்றஞ்சட்டாப்படுவது ‘மூன்றெழுத்து நடிகை’ அல்ல, ‘ஏழெழுத்து நடிகையாம்’ என நம்ப தகுந்த வட்டார தகவல்கள் கிளப்புகின்றன.
“மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு” என்பார்கள் — இப்போது இதுதான் விஜய்-சங்கீதா விவகாரத்தையும் சுற்றி பேசப்படும் பழமொழி. என்ன புரியுதா? ஓய்! பழமொழி.
