கன்னட திரையுலகில் அறிமுகமாகி, விஜய் சேதுபதி நடித்த ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மதராசி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ருக்மணி வசந்த். தற்போது தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரிஷப் செட்டியுடன் இணைந்து நடித்துள்ள காந்தாரா சேப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ட்ரெய்லர் மூலம் ருக்மணி வசந்த் தேசிய அளவில் “நேஷனல் கிரஷ்” என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படுகிறார்.
அவரின் இயல்பான அழகு, எளிமை, ஆழமான பார்வை ஆகியவை இந்த பட்டத்தை அவருக்கு தந்திருக்கிறது.
