“பிரீடம்” – ஜெயில் வாழ்க்கையின் வலிகளை வெளிப்படுத்தும் திரைப்படம்: சசிகுமார்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது ‘பீரிடம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

‘பீரிடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசும்போது கூறியதாவது:

‘பீரிடம்’ எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு படம். ஆர்ட் டைரெக்‌ஷன் சிறப்பாக இருக்கிறது. ஜிப்ரானுடன் இது நான்காவது கூட்டணி — அவர் இசையை மிக அழகாக அளித்துள்ளார். லிஜோமோல் படத்தில் வந்த பிறகு, படம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது.

படத்தில் மணிகண்டன் எனக்கு சாப்பாடு ஊட்டிக் கொடுத்தார்; ஆண்டனி, தன் கஷ்டங்களைச் சிரித்து பேசக்கூடியவர். தயாரிப்பாளர் பாண்டியன், ஆரம்பத்தில் மேனேஜராக இருந்தவர். அவர் தயாரிப்பாளர் ஆகிறேன் என்றபோது, நான் தயக்கம் தெரிவித்தேன். ஆனாலும் அவர் தன்னம்பிக்கையுடன் எடுத்துக்கொண்டார். அவரின் நம்பிக்கையே இந்தப் படத்தை ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இது ‘டூரிஸ்ட் பேமிலி’ மாதிரி காமெடி படம் கிடையாது. இது ஜெயிலில் அனுபவிக்கப்படும் கஷ்டங்களை உணர்த்தும் படம். 1991-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது. நமக்குத் தெரியாத ஒரு வரலாறு. இந்த மாதிரியான படத்தை எடுத்ததற்காக தயாரிப்பாளர் பாண்டியனுக்கு நன்றி. இயக்குநர் சத்யசிவாவின் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். வெற்றி தோல்வியைவிட, அவரது தொழில்முறையான அணுகுமுறையே முக்கியம். இந்தக் கதையை நம்பிக்கையுடன் எடுத்ததாலே அனைவருக்கும் பிடிக்கும் படம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படம் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக மாற்றும் ஒரு முக்கிய திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *