‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், மாதவனுடன் இணைந்து நடித்த அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தைப் பற்றிய அவரது பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“திரையுலகில் சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் என் மனதில் என்றும் நிற்கும். அதுபோன்ற ஒருவர்தான் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு உயர்ந்த இடத்தை அடைந்தாலும், பிறர் மீது காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
