நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் நாளிலேயே போட்டியாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
ஒவ்வொருவரையும் விஜய் சேதுபதி மேடையில் அழைத்து அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பினார். அவர்களில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான அரோரா சின்கிளேர் ஒருவர். நெட்டிசன்களால் ‘பலூன் அக்கா’ என அழைக்கப்படும் இவர், 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த 1,892 பேர் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் பிரத்யேக புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிட்டு வந்தார் அரோரா. இதன் மூலம் மாதத்திற்கு சுமார் 7 லட்சம் வருமானம் ஈட்டியிருந்தார்.
ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததால், அவர் வெளியே வரும் வரை எந்த பதிவும் இல்லையென தெரிகிறது. இதனால் “நாம் கொடுத்த ரூ.390 போச்சே!” என்று சப்ஸ்கிரைப் செய்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
