நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையில் சிறப்பு மிக்க திரைப்படமான ‘நாயகன்’ மீண்டும் திரையரங்குகளில் வர இருக்கிறது.
1987ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை மாஸ்டர் இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இசை அமைப்பில் இளையராஜா மாயாஜாலம் புரிந்தார். இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா திரையுலகில் அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தமிழ் சினிமாவின் மைல் கல்லான நாயகன், வெளியான காலத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து 214 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இப்போது கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற நவம்பர் 6ஆம் தேதி இந்த புகழ்பெற்ற படைப்பு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
