July 2026

நான் ஏரிக்கரை மேலிருந்து… அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி!

90களில் பால்யம், பதின்மத்தை கடந்த பலரும் , ‘சின்னத்தாயி’ திரைப்படத்திற்காக ராஜா கொடுத்த இந்த ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் மீது ஒரு தீரா மையலைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டவர்களுக்கு இது மனதுக்கு மிக நெருக்கமான பாடலாக இருக்கும். நானும் இந்த காலகட்டத்தில் பதின்மத்திற்குள் நுழைந்தவன் என்பதாலும், கிராமப்புறப் பின்னணியைக் கொண்டவன் என்பதாலும் இந்தப் பாடலின் மீது இயல்பாகவே அணுக்கம் உண்டானது. ‘சின்னத்தாயி’ திரைப்படம் வெளியான போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் […]

நான் ஏரிக்கரை மேலிருந்து… அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி! Read More »

Exclusive

காலத்துக்கும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட! ‘ரோஜா’

1991 ல் இயக்குநர் சிகரம் K.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’ திரைப்படத்தில் ஸ்வப்னா என்கிற கதாபாத்திரத்தின் வழியாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் மதுபாலா. பாலச்சந்தரின் திரைப்படத்தில் இவர் அறிமுகமானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் மதுபாலா. அவரின் தந்தை ஹிந்தி திரைப்படங்கள் சிலவற்றை தயாரித்திருக்கிறார். அவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த இயக்குநர் ஒருவர் மதுபாலாவை அங்கே பார்த்துவிட்டு, தனது படத்தில் அறிமுகப்படுத்துவதாக கேட்டிருக்கிறார். அப்படித்தான் முதல் வாய்ப்பு மதுபாலாவிற்கு அமைந்திருக்கிறது.

காலத்துக்கும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட! ‘ரோஜா’ Read More »

Exclusive

எத்தனை தூரம் நம் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆவணம்தான்! முந்தானை முடிச்சு

1983 ல் பாக்யராஜ் அவர்கள் எழுதி இயக்கி மாபெரும் வெற்றியடைந்த இந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தினை, சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்த போதுதான், என்ன மாதிரி ஒரு திரைக்கதை இது என்று வியந்து பார்க்கும் அனுபவப் பார்வை கூடி வந்திருப்பதை உணர முடிந்தது. இந்தப் படம் பேச இருக்கிற விஷயத்தைப் பற்றி முன்னோட்டம் போல, ஒரு வயதான தம்பதியின் அன்பு பரிமாறலைக் காட்டி தொடங்குகிற போதே, தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதையை வாசிப்பது போல ஓர் அனுபவத்தைத் தந்து

எத்தனை தூரம் நம் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆவணம்தான்! முந்தானை முடிச்சு Read More »

Exclusive

‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’,‘ஜிமிக்கி கம்மல்’ பிடிக்க காரணம் என்ன?

2015 ஆம் ஆண்டு வெளியான சண்டிவீரன் படத்தில் இசையமைப்பாளர் அருணகிரி கொடுத்த கேட்சியான டியூன் இந்த ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடல். மண்வாசம் வீசும் இம்மாதிரி மெட்டு அமைப்பிற்கும், பின்னணி இசைக் கோவைக்கும் எப்போதுமே நம்ம ஊரில் வரவேற்பு இருக்கும். என்னதான் மேற்கத்திய சாயல் மெட்டுக்களை டிரெண்ட் என்கிற அடிப்படையில் அதிகமாக அடித்துத் தள்ளினாலும், அவற்றில் பல கேட்கவும் நன்றாக இருப்பினும், இப்படி அரிதாக வரும் கிராமிய மெட்டுகளே நம்மின் ஆதி ஜீன்களுக்கு ஆசுவாசம் தருவனவாக இருப்பதாக ஓர்

‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’,‘ஜிமிக்கி கம்மல்’ பிடிக்க காரணம் என்ன? Read More »

Exclusive

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிகாரப் போட்டியின் கதை- இசாகப்பட்டணம்

இசாகப்பட்டணம் என்ற துறைமுகப் பகுதியை மையமாகக் கொண்டு, அதிகாரம், அரசியல், தொழிலாளர் ஆதிக்கம் மற்றும் குடும்ப மோதல்கள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கு வெப் சீரீஸ்தான் Isakapatnam. கதை என்ன? ஒன்றுமில்லாமல் இசாகப்பட்டணத்திற்கு வரும் நாயுடு, குறுகிய காலத்திலேயே அந்தப் பகுதியின் செல்வாக்கு மிக்க நபராக உயர்கிறார். தொழிலாளர் தலைவராக இருந்த சின்னாராவை வழியிலிருந்து அகற்றி, அந்தப் பகுதியையே அசைக்க முடியாத அளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். காவல் துறையும், அதிகாரத்தில் இருப்பவர்களும் நாயுடுவுக்கு பக்கபலமாக

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிகாரப் போட்டியின் கதை- இசாகப்பட்டணம் Read More »

Cinema Reviews

ஆணாதிக்கத்தை சிரிப்போடு கலாய்க்கும் லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர் – கட்டா குஸ்தி-2

கட்டா குஸ்தி 2 படம் முழுவதும் slight humour இழையோடிக்கொண்டே செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். முதல் பாகத்தைப் போலவே ஒரு பெண்ணின் wrestling கனவு கதையின் மையமாக இருந்தாலும், இந்த இரண்டாம் பாகம் அதைவிட ஆழமாக சென்று பெண் குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் மனநிலை, குடும்ப புரிதல் போன்ற விஷயங்களை மையப்படுத்துகிறது. அதனால் தான் இது சாதாரண தொடர்ச்சி படம் அல்ல; உணர்ச்சியிலும் கருத்திலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்ட குடும்ப

ஆணாதிக்கத்தை சிரிப்போடு கலாய்க்கும் லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர் – கட்டா குஸ்தி-2 Read More »

Exclusive

பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”!

70களின் பிற்பகுதியில் இரண்டு சிறுவர்–சிறுமியின் கொடூரமான கொலை மற்றும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதே காலக்கட்டப் பின்னணியில் புனைகதை வடிவில் இயக்குநர் இந்த தொடரை உருவாக்க முயன்றுள்ளார். 1978ஆம் ஆண்டு, சுமன் மற்றும் சாஹில் இருவரும் பாடுவதற்காக ரேடியோ ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். ஆனால் எந்த பேருந்தும் வராத நிலையில், குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டுமே என்று

பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”! Read More »

Cinema Reviews
Scroll to Top