2026

தி ஹேண்ட்மெய்டன் : பெண்களின் அறிவையும் ஆசையையும் கொண்டாடும் உலகத் தரச் சினிமா!

பெண்களின் அறிவாற்றல், மனோதிடம், தந்திரம் ஆகியவற்றை மையப்படுத்திய கதைகளை சினிமா இன்னும் அரிதாகவே கொண்டாடுகிறது. பெண்களின் வலிமையை வசனங்களிலும் பாடல்களிலும் மட்டுமே புகழ்ந்து பேசும் பல படங்களின் மத்தியில், அதை எந்தவித பிரசாரமும் இல்லாமல் தனது காட்சிமொழியால் நிரூபித்துக் காட்டுகிறது தி ஹேண்ட்மெய்டன் (The Handmaiden). இயக்குநர் பார்க் ச்சான் வூக் (Park Chan-wook) உருவாக்கிய இந்த திரைப்படம், பெண்களின் சாகசங்களுக்கும் அறிவுக்கும் பாலின வேறுபாடு கிடையாது என்பதை உலக சினிமாவின் மொழியில் பதிவு செய்கிறது. ஒரு […]

தி ஹேண்ட்மெய்டன் : பெண்களின் அறிவையும் ஆசையையும் கொண்டாடும் உலகத் தரச் சினிமா! Read More »

Exclusive

அன்பே டயானா -கடைசி அரைமணி நேரம் படம் அற்புதம்!

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் சீதா கிருஷ்ணா. தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சீதா கிருஷ்ணா தாய் சரளா,தந்தை பாஸ்கர்,தம்பி சிரஞ்சீவியுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் புகுந்த வீட்டில் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டில் இருக்கும் சகோதரி சத்தியவதியும் அவர்களுடனே இருக்கிறார். பாஸ்கர் ரெயில்வேத் துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். எந்நேரமும் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பவர். சிரஞ்சீவி அரசாங்கப் பணியில் இருப்பவர். சீதா கிருஷ்ணா உடற்பயிற்சி கோச்சாக இருந்து வருபவர். சரளா மாவு

அன்பே டயானா -கடைசி அரைமணி நேரம் படம் அற்புதம்! Read More »

Cinema Reviews

மன்மதன் முதல் வெந்து தணிந்தது காடு வரை காதல் நாயகனாக சிலம்பரசன் டிஆரின் திரைப்பயணம்!

தமிழ் சினிமாவில் காதலின் பல்வேறு பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்திய நடிகர்களில் சிலம்பரசன் டிஆர் முக்கியமானவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காதல், பிரிவு, ஏக்கம், தியாகம், போராட்டம் மற்றும் வாழ்க்கையின் உண்மைகளை பிரதிபலிக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலை வெவ்வேறு கோணங்களில் அணுகிய அவரது திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. கோவில் 2004 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான கோவில் திரைப்படம், மத வேறுபாட்டால் பிரிக்கப்படும் இரண்டு காதலர்களின் கதையை மையமாகக் கொண்டது.

மன்மதன் முதல் வெந்து தணிந்தது காடு வரை காதல் நாயகனாக சிலம்பரசன் டிஆரின் திரைப்பயணம்! Read More »

Exclusive

காதல் ரீசெட் ரிப்பீட்டுக்கு முன்பே மறதியை மையமாக்கிய தமிழ் சினிமாவின் மறக்க முடியாத திரைப்படங்கள்!

மறதி நோய் அல்லது நினைவிழப்பு என்பது தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முக்கியமான கதைக்கள அம்சமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. காதல், குடும்பம், த்ரில்லர், நகைச்சுவை மற்றும் பழிவாங்கும் கதைகள் என பல்வேறு வகை திரைப்படங்களில் நினைவிழப்பு கதையின் திருப்புமுனையாக செயல்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகவுள்ள காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படமும் 24 மணி நேரத்திற்கு மேல் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. அதற்கு முன்பே நினைவிழப்பை மையமாக வைத்து ரசிகர்களை கவர்ந்த சில

காதல் ரீசெட் ரிப்பீட்டுக்கு முன்பே மறதியை மையமாக்கிய தமிழ் சினிமாவின் மறக்க முடியாத திரைப்படங்கள்! Read More »

Exclusive

தமிழ் சினிமாவில் பெண்களின் புதிய முகம் சுதந்திரத்தையும் சக்தியையும் மறுபரிசீலனை செய்த கதாபாத்திரங்கள்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பெண்கள் குடும்பத்தின் உணர்ச்சி மையமாகவும், வீட்டிற்குள் மட்டுமே வாழும் கதாபாத்திரங்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. இன்றைய திரைப்படங்களில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் சுயநினைவு கொண்டவர்களாகவும், அநீதிக்கு எதிராக போராடுபவர்களாகவும், தங்களுக்கான அடையாளத்தை உருவாக்குபவர்களாகவும் வலிமையாகக் காட்டப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாரா நடித்த கோகிலா, தனது தாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் போதைப்பொருள்

தமிழ் சினிமாவில் பெண்களின் புதிய முகம் சுதந்திரத்தையும் சக்தியையும் மறுபரிசீலனை செய்த கதாபாத்திரங்கள்! Read More »

Exclusive

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி உச்சத்தை அடைந்தார்? ஐந்து தசாப்தங்களை கடந்த வெற்றிப் பயணம்!

தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை தக்கவைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிகாந்துக்கே சொந்தம். எண்ணற்ற தோல்விகள், கடுமையான விமர்சனங்கள், ஓய்வு பற்றிய வதந்திகள் என பல சவால்களை எதிர்கொண்டபோதும், ஒவ்வொரு முறையும் புதிய உச்சத்தை எட்டியவர் ரஜினிகாந்த். அதுவே அவரை சாதாரண நட்சத்திரமாக அல்லாமல், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற தனித்த அடையாளத்துடன் நிலைநிறுத்தியது. 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், ஆரம்ப காலங்களில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி உச்சத்தை அடைந்தார்? ஐந்து தசாப்தங்களை கடந்த வெற்றிப் பயணம்! Read More »

Exclusive

கண்டிப்பாக பார்க்க வேண்டிய காலத்தால் அழியாத பாரதிராஜாவின் திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா, இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனித உறவுகள், காதல், சாதி, சமூக மாற்றங்கள் மற்றும் கிராமத்து வாழ்க்கையை யதார்த்தமாக திரையில் பதிவு செய்த அவரது திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. பாரதிராஜாவின் திரைப்படங்களை இதுவரை பார்க்காதவர்களும், மீண்டும் ரசிக்க விரும்புபவர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய சில முக்கியமான படங்கள் இவை. 16 வயதினிலே 1977 ஆம் ஆண்டு வெளியான 16

கண்டிப்பாக பார்க்க வேண்டிய காலத்தால் அழியாத பாரதிராஜாவின் திரைப்படங்கள்! Read More »

Exclusive

நாளைய தீர்ப்பு முதல் ஜன நாயகன் வரை நடிகர் விஜயின் 34 ஆண்டுகால சினிமா பயணம்!

தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த விஜய், தனது கடைசி திரைப்படமான ஜன நாயகன் மூலம் திரையுலகிற்கு விடை கொடுக்கிறார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனாக அறிமுகமான அவர், பல வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்து இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த விஜய், 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை

நாளைய தீர்ப்பு முதல் ஜன நாயகன் வரை நடிகர் விஜயின் 34 ஆண்டுகால சினிமா பயணம்! Read More »

Exclusive

ரஜினி நடிக்கத் தெரியாதா? ‘தப்புத்தாளங்கள்’ பார்த்த பிறகு சொல்லுங்கள்!

ரஜினிக்கு நடிக்கத்தெரியாதுன்னு யாராவதுசொன்னா அவர் நிச்சயம் தப்புத்தாளங்கள் பார்த்திருக்க மாட்டார். என்னா நடிப்பு…. தேவுங்கிற ரௌடி. கையால் சொடக்குப்போடும், மூக்குப்பொடி போடும்,கழுத்தில்சைக்கிள் செயினோட சுத்தும் ரௌடி. தேவுவை சமூகமே ரௌடியாக்குகிறது. முதலில் அம்மா. பின் அம்மாவின் இரண்டாவது கணவர். அப்புறம் அரசியல். அவனுக்கு ஒரே எதிரி சமூகம் மட்டுமல்ல. தன் அம்மாவுக்கு பிறந்த தம்பி சோமா. சோமா ஒரு கள்ளச்சாராய வியாபாரி. தேவுவும், சோமாவும் ஓரே அம்மாவிடம் பால் குடித்து வளர்ந்தாலும் பரமவைரிகள். ஒரு போலீஸ் துரத்தலில்

ரஜினி நடிக்கத் தெரியாதா? ‘தப்புத்தாளங்கள்’ பார்த்த பிறகு சொல்லுங்கள்! Read More »

Exclusive

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்!

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? கலைஞர் தன் குடும்பத்தொழில் ஆசியாவிலேயே பெரிய தொழிலாக வளர போட்ட விதை தான் இன்று அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்து நிற்கிறது. சினிமா என்பதை தியேட்டரில் மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. அந்த சினிமாவை ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்தது டிவிக்கள். முக்கியமாக கலைஞர் கொண்டு வந்த இலவச கலைஞர் டிவி திட்டம். இன்று விஜய்யை பெண்களெல்லாம் முக்கியமாக கிராமப்புறப்பெண்களெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுகிற அளவுக்கு இருக்கிறதென்றால்

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்! Read More »

Exclusive
Scroll to Top